முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பாடசாலை உள்கட்டமைப்பை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அநுர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஒரு பாலர் பாடசாலை குழந்தையின் காலை உணவிற்கு செலவிடப்படும் தொகை 100 ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
https://www.youtube.com/embed/98iDCv4R6XA
