Home முக்கியச் செய்திகள் இலங்கையின் அடுத்த தலைமை நீதிபதி யார்..! கிடைத்தது அனுமதி

இலங்கையின் அடுத்த தலைமை நீதிபதி யார்..! கிடைத்தது அனுமதி

0

இலங்கையின் அடுத்த தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை(Preethi Padman Surasena) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) பரிந்துரைத்ததற்கு அரசியலமைப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை சமீபத்தில் ஜனாதிபதி பரிந்துரைத்தார்.

ஜனாதிபதியின் பரிந்துரைக்கு கிடைத்த ஒப்புதல்

அதன்படி, இன்று(23) கூடிய அரசியலமைப்பு சபை இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தது.

தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோ(Murdu Fernando) ஜூலை 27 ஆம் திகதி ஓய்வு பெற உள்ளார், மேலும்அவரது வெற்றிடத்தை நிரப்ப விரைவில் ஒரு புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்பட உள்ளார்.

 

NO COMMENTS

Exit mobile version