சம்மாந்துறை- கல்லரைச்சல் பகுதியில் உடன்பிறந்த சகோதரனை தொடர்ச்சியாக
அச்சுறுத்தி தவறான உறவு கொண்ட சகோதரி கர்ப்பமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,இருவருக்கும் இடையிலான தவறான உறவு 4 வருடங்களாக இடம்பெற்றுள்ளமை ஆரம்ப
விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் சகோதரனுக்கு சுமார் 11
வயது இருக்கும் போது சகோதரிக்கு 18 வயதாகிய நிலையில் இந்த சம்பவம்
ஆரம்பமாகியுள்ளது.
கர்ப்பமான சகோதரி
இந்த செயலுக்கு உடன்பிறந்த தம்பி எதிர்ப்பு தெரிவித்த
நிலையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களினால் மிரட்டி இந்த செயலை தொடர்ச்சியாக 4
ஆண்டுகளாக உடன்பிறந்த சகோதரி மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது 22
வயதான குறித்த சகோதரி வயற்றில் ஏற்பட்ட வலி காரணமாக சம்மாந்துறை ஆதார
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சட்ட நடவடிக்கை
இதன்போது சட்ட வைத்திய அதிகாரியின்
பரிசோதனைக்கு உட்பட்ட நிலையில் முறைகேடான உறவினால் 2 மாத கர்ப்பம் தரித்த
விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும், இன்று (5)
மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் விசாரணை
பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
