Home இலங்கை அரசியல் அதிபர் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை

அதிபர் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை

0

சிறிலங்காவின் எதிர்வரும் அதிபர் தேர்தலுக்குத் தேவையான வாக்குப்பெட்டிகளை தயார்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஏற்கனவே பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission) தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake)  தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அதிபர் தேர்தல் நிச்சயமாக நடைபெறவுள்ளதால், வாக்குப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வாக்குச் சாவடிகள் குறித்த விபரங்கள் கிடைத்தவுடன், வாக்குப் பெட்டிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக சரிசெய்ய ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வாக்குப்பெட்டிகள் சேதம்

வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்பட்ட ஏராளமான வாக்குப்பெட்டிகள் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றை அரச தொழிற்சாலைக்கு அனுப்பி சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், தேர்தலை இலக்காகக் கொண்டு அதிகாரிகள் கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் எனவும், அடுத்த வாரம் உள்ளுராட்சி தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுடன் கலந்துரையாடவுள்ளதாகம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு

இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகள் குறித்தும் அங்கு விவாதிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அதிபர் தேர்தல் செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரை நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அண்மையில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/prepare-ballot-boxes-for-sl-presidential-election-1718606845

NO COMMENTS

Exit mobile version