ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தில் பெரும் புரட்சிகளை நடத்திய நாடுகள் கூட இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தது ஒரு ஆபத்தான நிலையாகும்.
குறிப்பாக வியட்நாம் மற்றும் கியூபா போன்ற நாடுகளும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தன.
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் கையாளல் நான்கு கூறுகளை உள்ளடக்கியது.
அதில் ஒன்று உண்மையை காணல்.
இந்த விடயத்தை மட்டுமே இலங்கை அரசாங்கம் ஒவ்வொரு முறையும் கையிலெடுத்து தப்பித்துக்கொள்ள முயல்கின்றது.
இது இல்லாமல், குற்றவியல் நீதி, இழப்பீடு மற்றும் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான உறுதி போன்றவற்றை இலங்கை அரசாங்கம் இதுவரை காலமும் பொருட்படுத்தவில்லை.
இந்த அரசாங்கமும் இதனையே செய்வதாக பிரித்தானியத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் ரவி தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
