Home இலங்கை கல்வி கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு

கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு

0

முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயல்படுத்த, முழு
கல்வி முறையின் வசதிகளையும் மேம்படுத்தும் அதே வேளையில், நிறுவன
அமைப்பையும் வலுப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) வலியுறுத்தியுள்ளார்.

கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (08) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கல்வி மறுசீரமைப்பு செயல்முறையை ஆராய்ந்து தேவைகளின் அடிப்படையில் ஏற்பாடுகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கல்வி சீர்திருத்தங்கள்

இந்தக் கல்வி சீர்திருத்தங்களிலிருந்து விரும்பிய முடிவுகளை அடைய, முழு கல்வி முறையும் முழுமையாக மாற்றப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி  சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்போது, மனித வளங்களைப் போலவே, பௌதீக வளங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 முழுமையான ஆய்வுக்குப் பிறகு திட்டங்கள் மற்றும் வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் சமர்ப்பிக்கப்படும் என்றும், வரவு செலவுத் திட்டத்தில் இதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/president-announcement-education-reforms-1751972320

NO COMMENTS

Exit mobile version