Home இலங்கை அரசியல் இன்று காலை நட்டை வந்தடைந்த ஜனாதிபதி அநுர

இன்று காலை நட்டை வந்தடைந்த ஜனாதிபதி அநுர

0

ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இன்று (15) காலை நாடு திரும்பியுள்ளார்.

இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் சென்றிருந்த வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் ஆகியோரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்கள் இன்று காலை 08.58 மணிக்கு டோஹாவிலிருந்து கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 இருதரப்பு சந்திப்பு

ஜனாதிபதியின் ஜேர்மனிகான முதல் உத்தியோகபூர்வ விஜயம், இருதரப்பு அரசியல் சந்திப்புகள், வணிக வட்டமேசை மற்றும் ஜேர்மன் சுற்றுலாத் துறையுடனான ஈடுபாட்டுடன் நிறைவடைந்தது என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வோல்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதியும் அவரது குழுவினரும் கடந்த 11 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version