ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
குறித்த சந்திப்பானது நாளைய தினம் (10) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்புக்காக எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வரிகளின் தாக்கம்
இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்காவின் அசாதாரண வரிகளின் தாக்கம் குறித்து
விவாதிப்பதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து விவாதிக்க 12 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியுடன்
சந்திப்பைக் கோரியதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
