Home இலங்கை அரசியல் அமெரிக்கா பறக்கும் ஜனாதிபதி அநுர: வெளியாகியுள்ள அறிவிப்பு

அமெரிக்கா பறக்கும் ஜனாதிபதி அநுர: வெளியாகியுள்ள அறிவிப்பு

0

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க செப்டம்பர் 22 ஆம் திகதி அமெரிக்கா செல்ல உள்ளார்.

தனது பயணத்தின் போது, ​​பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸையும் சந்திப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜப்பானுக்கும் பயணம்

அமெரிக்காவில் தனது பணிகளை முடித்த பிறகு, ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி திசாநாயக்க செப்டம்பர் 26 ஆம் திகதி ஜப்பானுக்கு அரசு முறைப் பயணமாகச் செல்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில், செப்டம்பர் 27 அன்று நடைபெறும் உலகப் பொருட்காட்சி சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் அவர் கலந்து கொண்டு, மூத்த ஜப்பானிய அதிகாரிகளுடன் உயர் மட்டக் கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளார் என்றும் தெரியவருகிறது. 

NO COMMENTS

Exit mobile version