Home இலங்கை அரசியல் தேர்தலுக்கான நிதி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

தேர்தலுக்கான நிதி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

0

முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது எனது கருத்து என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய(Ranjith Siyambalapitiya)  தெரிவித்துள்ளார். 

கித்துல்கல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் பதிலளிக்கும் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

10 பில்லியன் ரூபா நிதி

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 10 பில்லியன் ரூபாவை தேவையான போது தேர்தலை நடத்துவதற்கு வழங்கத் தயார். அதன்படி முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து.

அண்மைக்கால நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்த இந்நாட்டின் பாடசாலைக் கல்வியையும் மீளக் கட்டியெழுப்ப முடிந்தது என குறிப்பிட்டார். 

Source: https://tamilwin.com/article/president-election-sri-lanka-2024-1714819088

NO COMMENTS

Exit mobile version