Home இலங்கை அரசியல் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தொழில் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : ஷெஹான் உறுதி

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தொழில் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : ஷெஹான் உறுதி

0

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நீண்டகாலமாக நிலவும் தொழில்
பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் நிதியமைச்சு கவனம் செலுத்தி வருவதாக நிதி
இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe ) தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஸ்தாபனத்தின் போது புதிய சேவை
அதிகாரிகளாக உள்வாங்கப்பட்ட 3027 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை
பாதிக்கும் பிரச்சினைக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

நிதியமைச்சின் இணக்கம்

இந்த 3027 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆரம்பகால சேவை
அதிகாரிகளாக கருதப்படுவதற்கு இரண்டாவது சந்தர்ப்பம் வழங்குவதற்கான தொழில்சார்
தீர்வு வழங்கப்பட்டதாகவும், இதனால் அவர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்
எனவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.

நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருந்த இப்பிரச்சினைக்கு தீர்வு காண
நிதியமைச்சின் இணக்கம் காணப்பட்டமை சாதகமான நிலை எனவும் நிதி இராஜாங்க
அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version