Home இலங்கை அரசியல் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க ஜனாதிபதியின் உறுதி – செய்திகளின் தொகுப்பு

மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க ஜனாதிபதியின் உறுதி – செய்திகளின் தொகுப்பு

0

எதிர்காலத்தில், பாடசாலைக் கல்வி நேரத்தின்போது தொழிற்சங்க நடவடிக்கைகளில்
ஆசிரியர்கள் ஈடுபட இடமளிக்கபோவதில்லை என்றும் அவசரச் சட்டத்தை
நடைமுறைப்படுத்தியேனும் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாப்போம் என்றும்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார். 

பலாங்கொட ஸ்ரீ தர்மானந்த வித்யாயதன பிரிவெனாவுக்கு நேற்றைய தினம் (27.06.2024) ஜனாதிபதி
விஜயம் மேற்கொண்டிருந்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்நாட்களில் ஆசிரியர்
சங்கங்களின் நடவடிக்கைகளால் ஆசிரியர் பணியின் மரியாதை
கேள்விக்குறியாகியுள்ளது.

கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலுக்கு மத்தியில்
பாதுகாப்பு தரப்பினரின் தடைகளை தகர்த்துச் செல்லும் ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு
முன்னுதாரணமாக இருக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

NO COMMENTS

Exit mobile version