Home இலங்கை அரசியல் பரபரப்பாகும் தேர்தல் களம் – யாழ். மாவட்டத்தில் ஆர்வத்துடன் வக்களிக்கும் தமிழ் மக்கள்

பரபரப்பாகும் தேர்தல் களம் – யாழ். மாவட்டத்தில் ஆர்வத்துடன் வக்களிக்கும் தமிழ் மக்கள்

0

யாழ்ப்பாண (jaffna) மாவட்டத்தில் இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

இன்று (21.9.2024) காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமான நிலையில் வாக்குச் சாவடிகளில்
பொதுமக்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி

தேர்தல் தினத்தில் வன்முறைகள் மற்றும் சட்டமீறல்களை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் 492,280 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி
பெற்றுள்ளதுடன், 511 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காலை 10 மணி வரையிலான நிலவரப்படி 22.53 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றதாக யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version