Home முக்கியச் செய்திகள் தமிழ் தேசியத்தின் எழுச்சியே பொதுவேட்பாளர்: அணிதிரளுமாறு முன்னாள் எம்.பி அழைப்பு

தமிழ் தேசியத்தின் எழுச்சியே பொதுவேட்பாளர்: அணிதிரளுமாறு முன்னாள் எம்.பி அழைப்பு

0

தமிழ்மக்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி நிறுத்தப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது எமது தார்மீக கடமையாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் ( Gnanamuthu Sreenesan) தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரையில் நடந்த தேர்தல்களில் 8 ஜனாதிபதிகளுக்கு வாக்களித்துள்ளோம் என்ன நடந்துள்ளது என கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ கடந்த நல்லாட்சி காலத்தில் மகிந்த ராஜாபக்வை தோற்கடித்து மைத்திரிபாலவை வெற்றிப்பெற செய்தோம்.ஆனால் அவரோ 2018 ல் மகிந்த ராஜாபக்சவை பிரதமராக்கினார்.

இவ்வாறு நாம் ஆதரித்த வேட்பாளர்களும் எங்களை ஏமாற்றியே உள்ளனர்.

இதனால் நம்முடைய அரசியல் வரலாறு ஏமாற்றப்பட்டதாகவே உள்ளது.

எனவே வலி நிறைந்த சமூகமாகிய நாம் தமிழ்பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.” என்றார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.

https://www.youtube.com/embed/QzLgORiT7Xg

NO COMMENTS

Exit mobile version