Home இலங்கை சமூகம் ஜனாதிபதி தேர்தல் : யாழில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிப் பட்டறை

ஜனாதிபதி தேர்தல் : யாழில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிப் பட்டறை

0

ஜனாதிபதித் தேர்தலில் ஊடகவியலாளர்களின் கடமை மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான
பயிற்சி வேலைத்திட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்றது.

யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (24) காலை 10 மணி தொடக்கம் இந்த வேலைத்திட்டம் நடைபெற்றது. 

வடக்கு ஊடகவியலாளர்களின் வகிபங்கை
அர்த்தமுள்ள வகையில் அதிகரிக்கச் செய்வதற்காக வியூ (VIEW) அமைப்பால் இந்த விசேட பயிற்சி
வேலைத் திட்டம்  முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் கலந்துகொண்டோர்

இந்நிகழ்வில் வியூ அமைப்பின் ஆலோசனை சபை பிரதானியும் முன்னாள்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission) தலைவருமான மகிந்த தேசப்பிரிய (Mahinda Deshapriya) மற்றும் வியூ அமைப்பின்
ஆலோசனை சபை
உறுப்பினரும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள்
உறுப்பினருமான எம்.எம்.மொஹமட் ஆகியோர் தலைமை வளவாளர்களாகப் பங்கேற்றனர்.

இதன்போது எல்லை நிர்ணயம், சட்ட நிர்வாக ஒழுங்கு, வாக்களிப்பு உரிமை, தெற்கில் உள்ள போராட்டம், வடக்கில் உள்ள போராட்டம் பற்றியும், விருப்பு வாக்கு தொடர்பாகவும்  விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஶ்ரீமோகன் உள்ளிட்ட
அதிகாரிகளும், ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version