Home முக்கியச் செய்திகள் பதவி விலகினார் பிரதமர் தினேஸ் குணவர்தன

பதவி விலகினார் பிரதமர் தினேஸ் குணவர்தன

0

பிரதமர் தினேஸ் குணவர்தன தனது பதவி விலகல் செய்வதாக அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 47 (2) ஆவது சரத்தின் பிரகாரம் தனது பதவி விலகல் செய்வதாக தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை சோசலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கதெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று பதவியேற்கவுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் எந்தவொரு வேட்பாளரும் ஐம்பது வீதத்தை பெறாததால் தேர்தல் ஆணைக்குழு நடத்திய இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வு அடிப்படையில் அநுர திஸாநாயக்க – 5,634,915 – 42.31% வாக்குகளை பெற்று வரலாற்று வெற்றி பெற்றுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version