Home முக்கியச் செய்திகள் அறுகம் குடா சர்ச்சை – விசாரணையில் முன்னேற்றம்: சிக்கப்போகும் பலர்

அறுகம் குடா சர்ச்சை – விசாரணையில் முன்னேற்றம்: சிக்கப்போகும் பலர்

0

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை இலக்கு வைத்து நடத்தப்படவிருந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்கள் சந்தேகநபர்கள் தொடர்பிலும் தகவல்கள் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இவை தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

இந்த நிலையில், கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான பிரேரணையை முன்வைத்து கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் காவல்துறையினர் இந்த உண்மைகளை அறிவித்துள்ளனர்.

கைதிகளிடம் வாக்குமூலம்

மேலும், சம்பவம் குறித்து மேலதிக உண்மைகளை வெளிக்கொணரும் வகையில் சிறையில் உள்ள பல சந்தேக நபர்களை விசாரணை செய்வதற்கும் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கும் அனுமதிக்குமாறும் காவல்துறையினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்காலத்தில் தெரிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version