Home இலங்கை பொருளாதாரம் புதிய வரி அறிமுகம்! நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

புதிய வரி அறிமுகம்! நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

0

அடுத்த ஆண்டில்(2025) வருமான இலக்கினை அடைவதற்கு உதவ கூடிய பிரதான வருமான வழிமுறையாக சொத்துக்கள் மீதான வரி அறவீடு செய்வதற்கு நிதி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

உருவகப்படுத்தப்பட்ட வாடகை வரி தொடர்பில் நிதி அமைச்சர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு தெளிவுபடுத்தி உள்ளது.

இந்த வரி ஊடாக வருமானம் ஈட்டுவதற்கே திட்டமிட்ட போதிலும் இந்த வரி சாதாரண வருமானம் ஈட்டுவோரின் மீது சுமத்தப்படாது என தெரிவித்துள்ளது.

அதிக மதிப்புள்ள சொத்துக்கள்

கூடுதல் வருமானம் ஈட்டும் நபர்களை இலக்கு வைத்து இந்த வரி அறவீடு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கூடுதல் பெறுமதி உடைய சொத்துக்கள் அல்லது சமூகத்தில் செல்வந்தர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மீது வரி அறவீடு செய்வதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தகுதியானவர்களுக்கு வரிச் சலுகை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 வீதமாகவும் 2026ம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 வீதமாகவும் வரி அறவீடு செய்ய உத்தேசித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
வீடுகள் மீது இவ்வாறு வரி அறவீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/property-tax-in-sri-lanka-1718677241

NO COMMENTS

Exit mobile version