Home இலங்கை சமூகம் தமிழ் ஊடகர்களுக்கு எதிரான அநுர அரசின் அடக்குமுறையைக் கண்டித்துப் போராட்டம்

தமிழ் ஊடகர்களுக்கு எதிரான அநுர அரசின் அடக்குமுறையைக் கண்டித்துப் போராட்டம்

0

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநுர அரசின் அடக்குமுறையைக் கண்டித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது இன்று(22) நாடாளுமன்றச் சுற்றுவட்டத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

இந்தப் போராட்டத்தை ஊடக ஊழியர் தொழிற்சங்கச் சம்மேளனம் மற்றும் இளம்
ஊடகவியலாளர் சங்கம் என்பன ஒன்றிணைந்து முன்னெடுத்தன.

போராட்டம்

முல்லைத்தீவைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான க.குமணனைப் பயங்கரவாதத்
தடுப்புப் பிரிவினர் கடந்த 17ஆம் திகதி அளம்பில் பொலிஸ் நிலையத்துக்கு
வரவழைத்து சுமார் 7 மணி நேரம் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.

இதனைக் கண்டித்தும், தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநுர அரசின்
அடக்குமுறையைக் கண்டித்தும் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

இந்தப் போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள்,
சட்டத்தரணிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் – கொடியிறக்கம்

NO COMMENTS

Exit mobile version