Home இலங்கை சமூகம் கொழும்பு நினைவேந்தலில் குழப்பம் விளைவித்தவர்களால் மீண்டும் பதற்றம்!

கொழும்பு நினைவேந்தலில் குழப்பம் விளைவித்தவர்களால் மீண்டும் பதற்றம்!

0

கொழும்பு- வெள்ளவத்தையில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பின் 16 வது நினைவேந்தலின் போது குழப்பம் விளைவித்த சிங்கள ராவய அமைப்பினரால் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த அமைப்பினர் நேற்றையதினம் (24) நீர்கொழும்பிலுள்ள தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்க அமைப்பிற்கு முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இனி இடமி்ல்லை என்று சிங்கள ராவய அமைப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

இதனால் அந்தப்பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

NO COMMENTS

Exit mobile version