Home இலங்கை சமூகம் வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

0

வைத்தியர்கள் மீதான
அடக்குமுறைகள் நிறுத்தப்பட்டு சுகாதார சேவையில் காணப்படும் குறைபாடுகள்
உடனடியாக நீக்கப்பட வேண்டும் என கோரி வைத்திய அதிகாரிகள் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். 

குறித்த பேராட்டமானது, நேற்றைய தினம் (03.09.2024) மதியம் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அம்பாறை (Ampara) – கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த
வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடிய வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரச வைத்திய
அதிகாரிகள், “தற்போதைய அரசாங்கம், இதுவரை வைத்தியர்கள் எதிர் நோக்கும் பல
கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் ஒன்றையும் நிறைவேற்றவில்லை. 

அத்தியாவசிய மருந்துகள்  

அத்துடன், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உடனடியாக மக்களுக்கு
கிடைக்க வழி செய்ய வேண்டும். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முறையற்ற ரீதியிலான வைத்தியர்களின் இடமாற்றம் வழங்குவதை நிறுத்த வேண்டும். 

வாழ்வாதாரத்துக்கு ஏற்ற
ஊதியங்களை அதிகரிக்க வேண்டும். வைத்தியசாலையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையினை
உடன் நிவர்த்தி செய்ய வேண்டும். குறிப்பாக சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள
நெருக்கடிகள் குறித்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தும் தொழிற்சங்கத்
தலைவர்களை ஒடுக்கும் நோக்கில் நடைமுறைபடுத்தப்படும் ஒழுக்காற்று விசாரணைகள்
மற்றும் ஏனைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்” என பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். 

மேலும், எதிர்காலத்தில் தாம் முன்வைத்த
கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சினால் எந்தவொரு தீர்வும் கிடைக்காவிட்டால்
நாடு பூராகவும் உள்ள வைத்தியசாலைகளில் அனைத்து சேவைகளையும் நிறுத்தி
பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version