Home இலங்கை சமூகம் மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

0

டிசம்பர் மாதத்தில் அனைத்துத் துறைகளுக்கும் 6% மிதமான அளவில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படலாம் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த தகவலை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (Public Utilities Commission of Sri Lanka) நிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு காலாண்டுக்கும் மின் கட்டணம் திருத்தப்படுகிறது. அதன்படி, மின்சார கட்டணத்தை 4 முதல் 11 சதவீதம் வரை குறைக்க முன்மொழிந்ததாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின் கட்டண முறை

இது, அனைத்து துறைகளுக்கும் 6 சதவீத மிதமான அளவாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கான முன்மொழிவுகள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், மேலும் திருத்தங்கள் தேவைப்படுமாயின், எதிர்வரும் திங்கட்கிழமை மின்சார சபைக்கு முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்படும் எனவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

அனைத்து முன்மொழிவுகளும் பொது கலந்தாய்வுக்கு அனுப்பி இறுதி முடிவு எடுக்கப்படும் என நிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்தார்.

மேலும், மக்களுக்கு கூடுதல் நிவாரணம் அளிக்கக்கூடிய மின் கட்டண முறையை அறிமுகம் செய்யும் நோக்கில் விலைச் சூத்திரம் மீளாய்வு செய்யப்படுவதாக மின்சக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version