Home இலங்கை அரசியல் தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க என்ன செய்யவேண்டும்: குகதாசன் தகவல்

தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க என்ன செய்யவேண்டும்: குகதாசன் தகவல்

0

தமிழ் கட்சியில் இருந்து தமிழ் பிரதிநிதித்துவத்தை தெரிவு செய்தால் தான் தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க முடியும் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan ) தெரிவித்துள்ளார். 

திருகோணமலை (Trincomalee) – திரியாய் பகுதியில் இன்று (26.10.2024) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தமழ் கட்சி சார்பில் பிரதிநிதிகளை தெரிவு செய்தால் தான் மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேச முடியும்.

தொல்பொருள் திணைக்களம்

ஜே.வி.பி உறுப்பினர்கள் தெரிவானால் அது நடக்காது. எனவே தான் மக்கள் இம் முறை இதனை கவனத்திற் கொண்டு பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டும்.

திரியாய் பகுதியில் பல பிரச்சினைகள் உள்ளன குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் பௌத்த விகாரைகளை அமைக்க மக்கள் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தியுள்ளனர்.

இது போன்று தொல்பொருள் திணைக்களம்,
வன இலாக திணைக்களம்,
துறை முக அதிகார சபை என  மக்களின் விவசாய காணிகளை அபகரித்து எல்லையிட்டுள்ளனர்.

தமிழ் பிரதிநிதித்துவம்

இதனை மீட்க தமிழ் பிரதிநிதித்துவம் இந்த மாவட்டத்துக்கும் மண்ணுக்கும் கட்டாயமாக தேவை இதனால் தான் உங்களிடம் இங்கு வருகை தந்துள்ளோம் தமிழ் மக்களின்
வாக்களிப்பு வீதம் குறைவாக காணப்படுகிறது.

எனவே இம் முறை ஆர்வத்துடன் வாக்களித்து தமிழ் பிரதிநிதித்துவத்தை தமிழ் கட்சியில் இருந்து தெரிவு செய்ய ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version