Home இலங்கை சமூகம் கேரதீவு – சங்குப்பிட்டி பாலத்திற்கு யாழ். அரசாங்க அதிபர் கள விஜயம்

கேரதீவு – சங்குப்பிட்டி பாலத்திற்கு யாழ். அரசாங்க அதிபர் கள விஜயம்

0

மன்னார்(Mannar) – யாழ்பாண பிரதான வீதியில் அமைந்துள்ள கேரதீவு, சங்குப்பிட்டி பாலத்தின் புனரமைப்பு நடவடிக்கைகளை மாவட்ட அரசாங்க அதிபர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அதன்படி, இன்றைய தினம் (26.10.2024) காலை 10.00 மணியளவில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்  அங்கு கள விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பயணிகளின் கோரிக்கை

அத்துடன், சங்குப்பிட்டி பாலம் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடி புனரமைப்பு நடவடிக்கைளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்து கொண்டுள்ளார்.

இதேவேளை, அண்மையில் சங்குப்பிட்டி பாலமானது அபாயகரமான நிலையில் காணப்படுவதாகவும் தொடர்சியாக வாகனங்களின் போக்குவரத்து இடம்பெற்று வருகின்ற போது பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் பயணிகளினால் குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும், சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு அந்த பகுதியில் பயணிக்கின்ற வாகனங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மேலதிக தகவல் – கஜிந்தன்

NO COMMENTS

Exit mobile version