Home இலங்கை அரசியல் பிரபாகரன் இன்னமும் உயிருடன்! கனடாவில் இடம்பெறும் மோசடிதொடர்பில் விசேட அறிக்கை

பிரபாகரன் இன்னமும் உயிருடன்! கனடாவில் இடம்பெறும் மோசடிதொடர்பில் விசேட அறிக்கை

0

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

பிரபாகரன் இன்னமும் உயிருடன் இருப்பதாக போலித் தகவல்களை பரப்பி கனடாவில் பல்வேறு தரப்பினர் பணம் வசூலித்து வருவதாக அந்நாட்டில் வசிக்கும் புலம்பெயர் நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

அதன்படி, வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் பின்வரும் கேள்விகள் பாதுகாப்பு அமைச்சிடம் கேட்கப்பட்டுள்ளது

  1. இறுதிச் சடங்கு எப்போது நடத்தப்பட்டன?
  2. இறுதிச் சடங்கு எங்கு நடைபெற்றன?
  3. இறுதிச் சடங்கு எவ்வாறு செய்யப்பட்டது? ( உதாரணம் – தகனம்)
  4. இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதா? அப்படியானால், அதன் அதன் இலக்கம் மற்றும் பிரதேசம்.

இந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்கண்ட தகவல்களை தான் கோருவதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version