Home இலங்கை சமூகம் ஆசிரிய ஆலோசகர்களின் சம்பள பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு: சட்டமா அதிபர்

ஆசிரிய ஆலோசகர்களின் சம்பள பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு: சட்டமா அதிபர்

0

இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவையின் சம்பள முறைமையில் நிலவும் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்பட்டு சம்பள வழங்கப்படும் என சட்டமா அதிபர் (
Attorney General of Sri Lanka ) அறிவித்துள்ளார்.

சம்பளபிரச்சனைகள் தொடர்பில் அகில இலங்கை ஆசிரிய ஆலோசகர்கள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு இன்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, ஆசிரியர்களின் சம்பளத்தை விட ஆசிரிய ஆலோசகர்களின் சம்பளம் குறைவாக இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

விரைவில் தீர்வு

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் குறித்த முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு சம்பள வழங்கப்படும் என சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் யுரேஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கு மனுதாரர் தரப்பு சம்மதம் தெரிவித்ததால், மனு தொடர்பான விசாரணையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/quick-resolution-for-teacher-salary-issue-1730206362

NO COMMENTS

Exit mobile version