Home இலங்கை அரசியல் யாழ்ப்பாணத்தில் மக்கள் அஞ்சலிக்காக இரா. சம்பந்தன் பூதவுடல்

யாழ்ப்பாணத்தில் மக்கள் அஞ்சலிக்காக இரா. சம்பந்தன் பூதவுடல்

0

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது (R. Sampanthan) பூதவுடல் யாழ்ப்பாணத்தில் (jaffna) அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

கொழும்பில் (colombo) இருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் ஊடாக அங்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். தந்தை செல்வா கலையரங்கில் இன்று (04) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சம்பந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த முடியும் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

விமானம் மூலம் திருகோணமலை

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வேண்டுகோளுக்கு இணங்க சம்பந்தனின் குடும்பத்தார் அவரது பூதவுடலை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராஜவரோதயம் சம்பந்தனது புகழுடல் விமானம் மூலம் திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.

மேலும், சம்பந்தனின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version