Home இலங்கை சமூகம் வழமைக்கு திரும்பும் தொடருந்து சேவைகள்

வழமைக்கு திரும்பும் தொடருந்து சேவைகள்

0

தொடருந்து சேவைகள் தொடர்பாக இலங்கை தொடருந்து திணைக்களம் (Sri Lanka Railway Department) அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில்,  இன்று காலை முதல் தொடருந்துகள் வழமை போன்று இயங்கும் என தொடருந்து பிரதி பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 6ம் திகதி முதல் தொடருந்து சாரதிகள் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்திருந்தது.

அரசாங்கத்தின் திட்டம்

இந்திலையில், நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் தொடருந்து பொது முகாமையாளர் எழுத்துமூலமாக வழங்கிய உறுதிமொழிக்கு அமைய தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது.

எதிர்காலத்தில் தொடருந்து சேவையை மறுசீரமைப்பதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  தொடருந்து தொழிற்சங்க கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும் தொடருந்து சேவையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் திட்டம் தோற்கடிக்கப்படும் என அதன் இணை அழைப்பாளர் திரு.எஸ்.பி.விதானகே தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றம்

இதேவேளை, தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிராக 1,000,000 கையொப்பங்களைப் பெற்றதன் பின்னர் உயர் நீதிமன்றத்திற்குச் செல்லத் தயாராக உள்ளதாக தொழில் வல்லுநர்களின் தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை (12) நாடளாவிய ரீதியில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அதன் தலைவர் கபில பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Source: https://ibctamil.com/article/rail-strike-ends-normal-service-resumes-1718084603

NO COMMENTS

Exit mobile version