Home இலங்கை அரசியல் உகாண்டாவில் மறைத்து வைக்கப்பட்ட ராஜபக்சர்களின் பணம்! மீட்க தயார் என்கிறார் நாமல்

உகாண்டாவில் மறைத்து வைக்கப்பட்ட ராஜபக்சர்களின் பணம்! மீட்க தயார் என்கிறார் நாமல்

0

உகாண்டாவில் ராஜபக்சர்களால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பணத்தை மீட்பதற்காக அரசாங்கத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (06.10.2024) கூட்டமொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மறைத்து வைக்கப்பட்டுள்ள பணம்

அவர் மேலும் தெரிவிக்கையில், “ராஜபக்சர்களில் யாரேனும் உகாண்டாவில் பணத்தை மறைத்து வைத்துள்ளோம் என்று கூறினால் அந்த பணத்தை இந்த நாட்டுக்கு கொண்டு வந்து வெளிநாடுகளின் கடனை அடைக்கலாம். 

மேலும் அவ்வாறு பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படும் பணம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டால் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி நாட்டிற்கு தேவைப்படாது என்றும் நாமல் ராஜபக்ச இதன் போது தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில் இருந்து சீஷெல்ஸ் மற்றும் உகண்டாவிற்கு விமானங்கள் மூலம் ராஜபக்சர்களால் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்ட பணத்தை இந்த அரசாங்கத்தினால் மீளக் கொண்டுவர முடியுமானால், மகிழ்ச்சியடைபவர்களில்
தானும் ஒருவராக இருப்பேன் என  நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version