Home முக்கியச் செய்திகள் யாழ்ப்பாணத்தில் பகடைக்காயாக செயற்படும் மருத்துவர் கேதீஸ்வரன் : அம்பலப்படுத்தும் அதிர்ச்சி காணொளி

யாழ்ப்பாணத்தில் பகடைக்காயாக செயற்படும் மருத்துவர் கேதீஸ்வரன் : அம்பலப்படுத்தும் அதிர்ச்சி காணொளி

0

ஒன்றிரண்டு வைத்தியர்கள் தங்களுடைய சொந்த நலனுக்காக சாவகச்சேரி வைத்தியசாலை இப்படியே இருக்க வேண்டும் என விரும்புகின்றார்கள்.

இந்த வைத்தியசாலையில் மனத்திருப்தியோடு வேலை செய்பவர்கள் என்றால் இரண்டு நோயாளர் காவு வண்டி சாரதிகள் மாத்திரமே. 

இவ்வாறு பெரும் அதிர்வலைகளை வெளிப்படுத்தியுள்ளார் யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனா.

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் நியமனம் தொடர்பில் பெரும் சர்ச்சைநிலை ஏற்பட்டிருந்தது.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட காணொளி பதிவானது யாழில், இடம்பெறும் அரச வைத்தியதுறையின் ஊழல் செயற்பாடுகளை அம்பலப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

தெற்கிலிருக்கும் சிங்கள அரசாங்கம் வடக்கு மக்களுக்கு ஒழுங்கற்ற விதத்தில் மருத்துவ வசதிகளை வழங்குகிறது என்ற பொய்யை நிரப்புவதற்காகவே யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் பகடைக்காயாக செயற்படுவதாகவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

சாவகச்சேரி, மற்றும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைகளில் மரணிக்கும் ஒருவரின் உடலை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி இழுத்தடிப்பு செய்வதாகவும், இதன் காரணமாக பொதுமக்கள் பணத்தை வழங்கியே உடலை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலை காணப்படுவதாகவும் அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆபத்தான மருந்துவகைகளை கடத்தியும், அவற்றை வடக்கில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழங்கியும் மனநோயை ஏற்படுத்தும் விதமாக ஆ.கேதீஸ்வரன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஆதங்கத்துடன் வெளிப்படுத்தும் மேலும் சில அதிர்ச்சி சம்பவங்களை தொகுத்து வருகிறது இந்த காணொளி,

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு,
04 July, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.

<!–


இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,

–>

https://www.youtube.com/embed/IQFrhEHRx_M

NO COMMENTS

Exit mobile version