Home இந்தியா சிறையில் நடந்த இராமாயணம்: தப்பியோடிய சிறைக் கைதிகள்

சிறையில் நடந்த இராமாயணம்: தப்பியோடிய சிறைக் கைதிகள்

0

இந்தியாவில்(India) நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறைச்சாலை ஒன்றில் நடைபெற்ற இராமாயண நாடகத்தில் சீதையை தேடுவது போல நடித்து கைதிகள் தப்பியோடியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் சிறைச்சாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறையில் உள்ள கைதிகளில் இருவர், ஹனுமானின் வானர சேனையில் இடம்பெறும் வானரங்களாக வேடமிட்டுள்ளனர்.

தப்பிய கைதிகள்

இந்நிலையில், அவர்கள் நாடகத்தின் போது சீதையை தேடுவது போல நடித்து காட்சிக்கு வெளியில் சென்றுள்ளனர்.

எனினும், அவர்கள் திரும்பி வராத நிலையில், கைதிகள் தப்பியதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதன்போது, கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனையிலிருந்த பங்கஜ் என்பவரும், ஆள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறைக்கு வந்த ராஜ்குமார் என்பவரும் இணைந்து நீண்ட நாட்களாக சிறையில் இருந்து தப்பிக்க திட்டம் தீட்டியுள்ளனர்.

அதன்படி, சிறையில் நடந்த இராமாயண நாடகத்தை பயன்படுத்திக்கொண்டு அவர்கள் இருவரும் தப்பிச் சென்றுள்ள நிலையில்
காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version