Home இலங்கை அரசியல் பௌத்த மக்களை நோக்கி ரணில் நகர்த்திய காய்: அம்பலமானது உண்மை முகம்..!

பௌத்த மக்களை நோக்கி ரணில் நகர்த்திய காய்: அம்பலமானது உண்மை முகம்..!

0

சர்வதேச ஊடகமான அல்ஜசீரா நடத்திய ஹெட் டூ ஹெட் நேர்காணலில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்திருந்த கருத்துக்கள் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தன. 

நேற்று முன்தினம், ஒளிபரப்பாகியிருந்த குறித்த காரசாரமான நேர்காணலில், ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலங்களில் ஏற்பட்டிருந்த முக்கிய அசம்பாவிதங்கள் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து கேள்விகள் தொடுக்கப்பட்டிருந்தன. 

இதன்போது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய கேள்விகளுக்கு அவர் பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்திருந்தார். 

அதேவேளை, “இந்த நாட்டில் பௌத்தர்களே பெரும்பான்மை இனத்தவர்கள், மகா சங்கத்தினருக்கு அடுத்து தான் ஏனைய அதாவது, கத்தோலிக்க திருச்சபையோ அல்லது ஏனைய மதத்தவர்கள்” என்றபடியான ஒரு கூற்றினையும் முன்னாள் ஜனாதிபதி முன்வைத்திருந்தார். 

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்க, தன்னை ஒரு பௌத்தர் என அடையாளப்படுத்திக் கொண்டு இவ்வாறான கருத்தை முன்வைத்துள்ளமை, பௌத்த மக்களை தம்வசப்படுத்துவதற்கு தான் என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட ஊடக இணைப்பாளர், தா.க ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார். 

லங்காசிறியின் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், ரணில் விக்ரமசிங்க தன்னை பௌத்தராக சொல்லிக் கொள்ளும் அளவு அவர் அவ்வாறு நடந்து கொண்டதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

NO COMMENTS

Exit mobile version