Home இலங்கை அரசியல் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ரணில் அறிவிப்பு

பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ரணில் அறிவிப்பு

0

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து ரணில் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் (United National Party) தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணிக்கு ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்கவுள்ளார்.

பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னம்

ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த கட்சிகள் மற்றும் அமைப்புக்களை இணைத்து கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியையும் கூட்டணியில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், சஜித் பிரேமதாஸ அதனை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version