அதி தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாட்களில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியமை தற்போது இலங்கையில் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) இருதயம் பலவீனமாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாகவும் அதை இயல்பு நிலைக்கு கொண்டு வர அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லன தெரிவித்திருந்தார்.
அத்துடன், ரணிலுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லன கடந்த (27.08.2025) திகதி தெரிவித்திருந்த நிலையில் இன்று அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
முன்னாள் ஜனாதிபதி ரணிலின் கைது, விளக்கமறியல், வைத்தியசாலை ICU நாடகங்களின் பின்னணியில் என்ன நடந்தது என்பதை கீழ் உள்ள காணொளியில் விரிவாக காணுங்கள்
https://www.youtube.com/embed/AnTTeqNThL4
