Home இலங்கை அரசியல் மோடியைப் போன்றவர் ரணில்! டயானா புகழாரம்

மோடியைப் போன்றவர் ரணில்! டயானா புகழாரம்

0

இந்தியாவில் நரேந்திர மோடி(Narendra Modi) எப்படியோ அதுபோலவே இலங்கையில் ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க(Ranil Wickremesinghe). இவ்விருவருமே தேர்தல்களில் நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியைத்
தக்கவைத்துக்கொள்வார்கள் என்று இராஜாங்க அமைச்சர் டயானா கமகே(Diana Gamage) தெரிவித்தார்.

ரணில் நிச்சயம் வெல்வார்

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

சவாலான சூழ்நிலையிலேயே இந்த நாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
பொறுப்பேற்றார். அவர் இதற்கு முன்னர் ஜனாதிபதியாகத் தெரிவு
செய்யப்பட்டிருந்தால் இந்த நாடு சிறந்த நிலையில் இருந்திருக்கும். அதனை அவர்
தனது செயல் மூலம் நிரூபித்துள்ளார்.

இந்தியாவில் 2ஆம் கட்ட வாக்குப் பதிவு இடம்பெற்று வருகின்றது. அந்தத்
தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி நிச்சயம் வெற்றி பெறுவார். அவர் மீண்டும்
பிரதமர் ஆவார். அவர் இந்தியாவை நேசிக்கின்றார்.

இந்தியாவில் நரேந்திர மோடி
போல்தான் இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருகின்றார்.
அவர் நிச்சயம் ஜனாதிபதியாக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலை தொடர்பில் ஆய்வு செய்யும் குழு : தேவையான டொலர்கள் கையிருப்பில்

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் புதிய வரி : அரசாங்கம் அறிவிப்பு

ஊழியர் சேமலாப நிதியம் பெறுவோருக்கு மகிழ்ச்சித் தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version