ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும்(ranil wickremesinghe) தமிழ்
முற்போக்குக் கூட்டணியின் தலைமைக் குழுவினருக்கும் இடையில் இன்று(10) சந்திப்பு
இடம்பெற்றுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் அவரது ஃப்ளவர் வீதி அலுவலகத்தில்
இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது
தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பாக தலைவர் மனோ கணேசன்(mano ganeshan), பிரதித் தலைவர்களான
பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஒத்துழைப்பது வழங்குவது
தொடர்பாக உரையாடல் இடம்பெற்றது என்று கூட்டணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ரணில் விக்ரமசிங்க நாளை(11) ரஷ்யா செல்லவுள்ளதால் இந்தச் சந்திப்பு அவசரமாக
ஏற்பாடு செய்யப்பட்டது என்று கூறிய கூட்டணி தரப்பு, உள்ளூராட்சி மன்ற விவகாரம்
தவிர்த்த ஏனைய விடயங்கள் உரையாடப்பட்டனவா என்ற கேள்விக்குப் பதிலளிக்க
மறுத்துவிட்டது.
