Home இலங்கை அரசியல் ரணிலின் மே தின மேடையில் ஏறப் போகும் மொட்டுக் கட்சி எம்.பி

ரணிலின் மே தின மேடையில் ஏறப் போகும் மொட்டுக் கட்சி எம்.பி

0

மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது கட்சியின் மேதினக் கூட்டத்தைப் புறக்கணித்து, ஐக்கிய தேசிய கட்சியின் (United National Party) மேதினக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுண (மொட்டுக்) கட்சியின் மேதினக் கூட்டம் இன்று (01.05.2024) பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மேதினக் கூட்டம்

இந்நிலையில் அக்கட்சியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான கயாஷான் நவநந்தன(Gayashan Nawananda) என்பவர் மொட்டுக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

அதற்குப் பதிலாக அவர் தனது தேர்தல் தொகுதியான வெல்லவாய தேர்தல் தொகுதியில் இருந்து ஆதரவாளர்களைத் திரட்டிக் கொண்டு, கொழும்பு மாளிகாவத்தையில் நடைபெறவுள்ள ஐ.தே.க.வின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றுள்ளார். 

Source: https://tamilwin.com/article/ranil-may-day-meeting-attend-podujana-mp-1714555087

NO COMMENTS

Exit mobile version