Home இலங்கை அரசியல் ரணிலின் கைதுக்கு எதிராக போராடுகின்றவர்கள் தொடர்பில் பகிரங்க சந்தேகம்!

ரணிலின் கைதுக்கு எதிராக போராடுகின்றவர்கள் தொடர்பில் பகிரங்க சந்தேகம்!

0

ரணில் விக்ரமசிங்கவின் கைதுக்கு எதிராக செயல்படுவதன் மூலமாக சிலர் தமது கைதுகளை தடுத்து கொள்ளலாம் என நினைக்கலாம் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பு 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், அடுத்தடுத்த கட்டமாக இந்த கைதுகள் தங்கள் பக்கமாக வந்து விடக்கூடாது என்பதற்காக அதற்கு முன்னாயத்தம் செய்கின்றார்கள்.

எதிர்க்கட்சிகளின் நியமான செயற்பாடுகளை ஏற்றுக் கொள்கின்றோம் அதாவது சட்டத்திற்கு அப்பாற்பட்ட முறையில் செயல்பட்டால் அதற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

சட்டப்படி செயல்படுகின்ற செயல்பாடுகளுக்கு வழி விட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version