Home இலங்கை அரசியல் திருகோணமலையில் ரணில் வகுத்துள்ள திட்டம்: மோடிக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி

திருகோணமலையில் ரணில் வகுத்துள்ள திட்டம்: மோடிக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி

0

திருகோணமலை உள்ளிட்ட நான்கு பிரதான நகரங்களை இலங்கையின் பிரதான மையங்களாகக் கட்டியெழுப்ப அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் வைத்து விசேட உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

பிரதான மையங்கள்

“கொழும்பு, காலி, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களை இலங்கையின் பிரதான மையங்களாகக் கட்டியெழுப்ப அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

கண்டி நகரை கலாசார மற்றும் கலை மையமாகவும், காலநிலை மாற்றங்களுக்கான பல்கலைக்கழகமாகவும் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை கலகெதரவில் நிறுத்துவதற்குப் பதிலாக கடுகஸ்தோட்டைக்கு வரை கொண்டு செல்லுமாறு ஜப்பானிடம் நான் கேட்டுக்கொண்டேன்.

மோடியுடன் கலந்துரையாடல் 

இது ஒரு பெரிய நகர்ப்புறபகுதியாக சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்டியை ஒரு பெரிய மையமாக மாற்றுவதற்கான திட்டங்கள் இப்போது வகுக்கப்பட்டுள்ளன.

இந்திய பிரதமமோடியுடன் கலந்துரையாடினேன். சென்னை தனியார் விமான நிறுவனத்தின் ஒரு வளாகத்தை இலங்கையில் நிறுவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நான் கண்டியை பரிந்துரைத்தேன். இப்போது கலஹாவில் தொடங்க பரிந்துரைக்கிறேன். அடுத்த 10 வருடங்களில் கண்டியை இலங்கையின் முக்கிய நகரமாக மாற்றுவதுதான் இந்தத் திட்டங்களின் நோக்கம்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version