முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை மறுதினம் (11.06.2025) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மருந்து இறக்குமதி தொடர்பில் அளித்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
