Home இலங்கை அரசியல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு ஜனாதிபதி ஆதரவு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு ஜனாதிபதி ஆதரவு

0

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் நேற்றைய தினம் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மனு குறித்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்துள்ளார்.

இலங்கை அரசியலமைப்பின் படி ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதோடு 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் சரியானது என்பதே தனது நிலைப்பாடு எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கு முன்னர் சமிந்திர தயான் லெனவ என்பவர் தன்னிடமோ அல்லது தனது சட்டத்தரணிகளுடனோ அது தொடர்பில் கலந்தாலோசிக்கவோ ஆலோசனை பெறவோ இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக்காலம்

முன்னதாக தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு நேற்றையதினம் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் குறித்த மனுவில், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் திகதி தொடர்பில் நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை தற்போது நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version