முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஊடகங்களுக்கு ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது வீட்டிலிருந்து இன்று (01) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஊடக அறிக்கை
குறித்த அறிக்கையில், அவர் கைது செய்யப்பட்ட போது அவருக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
அத்துடன், நான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு விளக்கமறியளில் வைக்கப்பட்டு பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து எனக்கு பிணை வழங்கும் வரை எனக்காக செயற்பட்ட இணையத்தளங்களுக்கு மீண்டும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
மேலும், பிரிதொரு நாளில் உங்களை சந்திக்க எதிர்பார்த்துள்ளேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
