Home இலங்கை அரசியல் வன்னி தேர்தல் தொகுதியில் ரணிலுக்கே அதிக வாக்கு : காதர் மஸ்தான் நம்பிக்கை

வன்னி தேர்தல் தொகுதியில் ரணிலுக்கே அதிக வாக்கு : காதர் மஸ்தான் நம்பிக்கை

0

ஜனாதிபதி தேர்தலில் வன்னி தேர்தல்
தொகுதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அதி கூடிய வாக்குகளை பெற்றுக் கொள்வார் என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே. காதர் மஸ்தான் (K. Kader Masthan) தெரிவித்துள்ளார்.

அதேபோன்று தேசிய
ரீதியிலும் அதிகூடிய வாக்குகளை பெற்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக இன்று (13) மன்னாரில் (Mannar) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்களின் அமோக வரவேற்பு 

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ”மன்னார் நகரத்தை பொறுத்தமட்டில் வியாபாரிகளும், மக்களும், கல்வியாளர்களும்
மிகவும் தெளிவாகவே இருக்கின்றார்கள்.

தற்போதைய நிலையில் இருந்து சற்று இந்த
நாடு முன்னேறி பொருளாதாரம் மேம்பட வேண்டுமாக இருந்தால் தற்போதைய ஜனாதிபதி
ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட
வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வருவார் என மக்களும்
வர்த்தகர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். மக்கள் உண்மையில் ரணில் விக்ரமசிங்கவை
ஆதரிக்கின்றனர். மக்களின் அமோக வரவேற்பு எங்களுக்கு கிடைக்கிறது.

தேர்தல் வெற்றி 

ரணில் விக்ரமசிங்க வன்னி தேர்தல் தொகுதியில் அதி கூடிய வாக்குகளை
பெற்றுக்கொள்வார். அதே போன்று தேசிய ரீதியிலும் அதி கூடிய வாக்குகளை பெற்று
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார்.

எதிர்வரும் 22 ஆம் திகதி தேர்தல் வெற்றி அறிவிப்பின் போது அதிகூடிய
வாக்குகளுடன் மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க
அறிவிக்கப்படுவார் என்பது மக்கள் எமக்கு வழங்கும் ஆதரவு மூலம்
உறுதியாகியுள்ளது.

இந்த நாடும் மேலும் அபிவிருத்தி அடைய ரணில் விக்ரமசிங்கவின்
சின்னமான காஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்“ என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version