துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 400 உப்பு கொள்கலன்களை மீண்டும்
ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
உப்பு இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடுவுக்குப் பின்னர்
இறக்குமதி செய்யப்பட்டதால் குறித்த கொள்கலன்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக
சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருகோட தெரிவித்தார்.
துறைமுகத்தில் கொள்கலன்கள்
கடந்த ஜூன் 10 ஆம் திகதி வரை உப்பு இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி
அளித்திருந்தது.
இறக்குமதியாளர்கள் தாமதக் கட்டணம் செலுத்தி துறைமுகத்தில் இந்தக் கொள்கலன்களை
இன்னும் வைத்திருப்பதாக சுங்கம் தெரிவித்துள்ளது.
