டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தனியார் நிறுவனமொன்றினால் 100 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த காசோலையை அதன் தலைவர் இம்தியாஸ் புஹார்தீன்(Imtiaz Buhardeen) நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதிஅலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார்.
கண்டி மாவட்டத்தில் வெள்ள நிவாரண வேலைத்திட்டங்கள் மற்றும் புனர்நிர்மாணப் பணிகளுக்கு தொடர்ந்தம் ஆதரவு வழங்க எதிர்பார்ப்பதாக தலைவர் இம்தியாஸ் புஹார்தீன் ஜனாதிபதியின் செயலாளரிடம் தெரிவித்தார்.
மக்களுக்கு நிவாரணம்
அதனை தொடர்ந்து,
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு மற்றுமமொரு தனியார் நிறுவனத்தினால் 05 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த காசோலையை அதன் தலைவர் சிரான் பீரிஸ்
நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார்.
100 மில்லியன்
மேலும் மற்றுமொரு நிறுவனத்தினால் 100 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான காசோலையை வர்த்தகக் குழுமத்தின் தலைவர் டட்லி சிறிசேன, இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் வழங்கினார்.
10 மில்லியன்
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு ஜனந்தி சந்தனிகா, தனது தனிப்பட்ட நிதியிலிருந்து 10 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கினார்.
அதற்கான காசோலையை அவர், இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்துள்ளார்.
