Home இலங்கை சமூகம் 18 பாடசாலைகளுக்கு சிவப்பு அறிவிப்பு: வெளியானது காரணம்

18 பாடசாலைகளுக்கு சிவப்பு அறிவிப்பு: வெளியானது காரணம்

0

செயற்படுத்தப்பட்டுள்ள சிறிப்பு நுளம்பு கட்டுப்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக 18 பாடசாலைகளுக்கு சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை மருத்துவ சங்கம் இன்று (30) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் அனோஜா தீரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

நுளம்பு கட்டுப்பாட்டு திட்டம்

257 பாடசாலைகள் சோதனை செய்யப்பட்டுள்ளதுடன், அதில் 131 பாடசாலைகளில் நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவுடன் இணைந்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, மே 19 முதல் 24 ஆம் திகதி வரை 15 மாவட்டங்களில் உள்ள 95 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை மையமாகக் கொண்டு சிறப்பு நுளம்பு கட்டுப்பாட்டு திட்டத்தை செயல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version