Home இலங்கை சமூகம் காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பதிவுகள்

காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பதிவுகள்

0

பல்வேறு சந்தர்ப்பங்களில் காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகத்தினர் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சந்திப்பு, இன்றைய தினம் (15.08.2024) காலை 9.30 மணியில் இருந்து பி.ப 2.30 மணிவரை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

காணாமல் போன உறவுகளின் உறவினர்கள் 40 பேரிடம் இந்த பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு இதன் செயற்பாடு பல கட்டங்களாக நடைபெறுகின்றது.  

சந்திப்பில் கலந்துகொண்டோர்  

இந்த சந்திப்பில் காணாமல் போன ஆட்கள் பற்றிய ஆணைக்குழுவின் தவிசாளர் மகேஸ் கட்டுலாந்த, காணாமல் போனோர் அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தற்பரன், காணாமல் போன அலுவலகத்தின் அங்கத்தவர் யோகராசா மற்றும் காணாமல் போனோர் அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.  

Source: https://tamilwin.com/article/registrations-made-with-relatives-of-missings-1723752796

NO COMMENTS

Exit mobile version