Home இலங்கை சமூகம் போதைக்கு அடிமையான பெண்களுக்காக தமிழர் பகுதியில் விசேட புனர்வாழ்வு நிலையம்!

போதைக்கு அடிமையான பெண்களுக்காக தமிழர் பகுதியில் விசேட புனர்வாழ்வு நிலையம்!

0

வவுனியா பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பெண்களுக்கு புனர்வாழ்வளிக்க
புதிய புனர்வாழ்வு நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலையத்தில் 100 பெண்கள் வரையில் புனர்வாழ்வளிக்கப்பட முடியும் என புனர்வாழ்வு பணியகம் தெரிவித்துள்ளது.

மறுவாழ்வு

இந்த நிலையம் ஊடாக, நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக போதைக்கு அடிமையான பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களை வவுனியாவில் அமைந்துள்ள இந்த புனர்வாழ்வு நிலையத்திற்கு புனர்வாழ்விற்காக பரிந்துரைக்குமாறு நீதிச்சேவை ஆணைக்குழு அனைத்து நீதிபதிகளுக்கும் அறிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version