Home இலங்கை அரசியல் ரணில் – அநுரவை நம்பி ஏமாறாதீர்கள்! மக்களுக்கு சஜித் எச்சரிக்கை

ரணில் – அநுரவை நம்பி ஏமாறாதீர்கள்! மக்களுக்கு சஜித் எச்சரிக்கை

0

ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க மற்றும் அநுரகுமார திஸாநாயக்கவை நம்பி ஏமாற வேண்டாம்
என்று நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ரணில் விக்கிரமசிங்க கூட்டணியிடம் நாட்டை
ஒப்படைப்பதா? இல்லை என்றால் நாட்டைக் கட்டி எழுப்புகின்ற, நாட்டை வெற்றி
பெறச் செய்யும் பொதுமக்களின் யுகத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெறச்
செய்வதா? என்ற தீர்மானம் மக்கள் வசமே காணப்படுகின்றது.

சுபீட்சமான வளமான வாழ்க்கை

இன்று ரணில் மற்றும் அநுர பெரிய டீல் ஒன்றை செய்திருக்கின்றார்கள். அது சஜித்
பிரேமதாஸவை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்கின்ற டீல் ஆகும்.

ரணில் மற்றும் அநுர அரசியல் ஜோடி எந்த அளவு டீல் செய்து கொண்டாலும், மக்களை
சுபீட்சமான வளமான வாழ்க்கைக்கு கொண்டு செல்வதற்கு மக்களுடனே எமது டீல்
காணப்படுகின்றது.” – என்றார். 

NO COMMENTS

Exit mobile version