Home முக்கியச் செய்திகள் தனியார் வாகன இறக்குமதி குறித்து இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்

தனியார் வாகன இறக்குமதி குறித்து இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்

0

இலங்கையின் தனியார் வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை 2025 ஆம் ஆண்டிற்குள் நீக்குவதற்கு அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் (Anuradhapura) நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், ”2023 ஆம் ஆண்டு முதல் காலாண்டில், 10 சதவீத பொருளாதாரம் சுருங்கியிருந்த நிலையில், தற்போது 5.3 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் உள்ளது.

பொருளாதார வீழ்ச்சி

அதன்படி, வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதுடன், 2025 ஆம் ஆண்டளவில் தனியார் வாகனங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதினையும் அரசாங்கம் நோக்கமாக கொண்டுள்ளது.

நாட்டில் சுதந்திர சந்தைக்குத் தேவையான சூழலை உருவாக்கும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தற்போதைய பொருளாதார வளர்ச்சி வரை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் மூன்றாவது தவணை சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்டது.

சர்வதேச நாணய நிதியம் 

இலங்கையை உடைக்க முடியாத பொருளாதாரமாக மாற்றி, நீண்டகால பொருளாதார வேலைத்திட்டத்திற்கு தேவையான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியம் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றி, மக்கள் இலகுவாக வாழக்கூடிய நாட்டை உருவாக்குவது அரசாங்கத்தின் நம்பிக்கையாகும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version